யோகா மூலம் உங்கள் ரத்த அழுத்தத்தை சீராக்குங்கள் (Yoga for Blood Pressure in tamil)

ரத்த அழுத்தம் என்னும் சொல் உடலின் அத்தியாவசியமான திறனைக் குறிக்கின்றது.இதயம் மாறி மாறி உந்தித்தள்ளித்,தளர்வதால், ரத்தக் குழாய்களில் ரத்தம் பாய்ந்து, அக்குழாய்களின் சுவர்கள் அழுத்தப் படுகின்றன.

இந்த அழுத்தம் இரண்டு எண்ணிக்கைகளின் மூலம் அளவிடப் படுகின்றது சுருக்கியக்க எண் (Systolic) இதய விரிவியக்க எண்ணிற்கு(diastolic) மேலே எழுதப் படுகின்றது. சுருக்கியக்க எண், இதயம் ரத்தத்தை உந்தித் தள்ளும்போது உங்களுடைய ரத்த அழுத்தத்தையும் இதய விரிவியக்க எண்,( மிக முக்கியமானது) இதயத் துடிப்பிற்கு இடையே உள்ள ரத்த அழுத்தத்தையும் குறிப்பிடுகின்றன.

உங்களுடைய ரத்தக் குழாய்கள் சாதாரணமாகத் தளர்வடையாமல் இருந்தால், மற்றும் ரத்தக் குழாய் தசைகளில் அடைப்பு ஏற்பட்டால், ரத்த அழுத்தம் கூடும். இதுவே உயர் ரத்த அழுத்தம் என்று அழைக்கப் படுகின்றது.

அபாயக் குறியீடுகள்

ஒரு நாளில் ரத்த அழுத்தம் வேறுபாடும் என்றாலும், செயல்படும் போது அதிகமாகவும், தூங்கும்போது குறைவாகவும் இருக்கும் என்றாலும், வயதானவர்கள், கண்டுபிடிக்காத அல்லது புறந்தள்ளப் பட்ட அழுத்த நிலைகள் மிகவும் அபாயமானவை ஆகும்.மேலும் இது பல நாள்பட்ட நோய்களுக்குக் காரணமாகும்

  • இதய செயலிழப்பு மற்றும் (குறிப்பாக விழித்திருக்கும் நேரத்தில்) பக்கவாதம், மாரடைப்பு
  • தமனிகள் கடினப்படுதல்
  • பெரிதாகும் இதய தசைகள்
  • சிறுநீரக சேதம் மற்றும் நாளமில்லா சுரப்பி செயலிழப்பு
  • உயர் இரத்த அழுத்தம் ஏற்படுதல்
  • கார்டியோ வாஸ்குலர் அமைப்பை பலவீனப்படுதல்
  • இதயம் மற்றும் தமனிகள் வேலை பளு அதிகரிப்பு

உயர் ரத்த அழுத்தம் ஒரு அமைதியான கொலையாளி

உயர் ரத்த அழுத்தம் ஒரு அமையான கொலையாளி என்றே பொதுவாகக் கருதப் படுகின்றது.ஏனெனில் அது எந்த அறிகுறிகளையும் குறிப்புக்களையும் காட்டுவதில்லை.அதற்கு ஒரு தனி நபரின் உடலமைப்பு, உடல் நலம், வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்துப் பல காரணங்கள் உள்ளன.அழுத்தம், குறைந்த நோய் எதிர்ப்புத் திறன்,சத்துக் குறைபாடு, ரத்தக் குழாய்கள் கடினமாதல், உடல் பருமன் ஆகியவை சில காரணங்கள் ஆகும்.

உயர் ரத்த அழுத்த அறிகுறிகள்

இது எளிதாகக் கண்டு பிடிக்கக் கூடியது அல்ல. மேலும் அது மாறுபாடுகளுடன் கூடியது. கீழ் கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உங்கள் உடல் நல மருத்துவரை அணுகவும்

  • மயக்கம், தலை சுற்றல், களைப்பு
  • நெஞ்சு வலி மூச்சுத் திணறல், படபடப்பு
  • காதுகளில் ஓசை
  • தூங்கி எழுந்ததும் தலை வலி, கழுத்து வலி,பொதுவாக உடனே குறைந்து விடும்
  •  
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • பார்வை மங்குதல்

உயர் ரத்த அழுத்தத்திற்கு ஏன் யோகா?

இந்தப் பிரச்சினைக்கு யோகாசனங்கள் பயனுள்ளவை என்று உணர்ந்தறியப் பட்டிருக்கின்றது.

  • உண்மையில் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஒரு ஆல்பா மூளை அலையை உருவாக்குகிறது.
  • தன்னாட்சி நரம்பு மண்டலத்தில் சமநிலை கொண்டு நரம்பு மண்டலத்தின் பாகங்களை உறுதியாக்கும்.
  • உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் ஏற்படுவதால், புழக்கத்தில் மேம்பாடு, உஷார்நிலை, மற்றும் அறிவாற்றல் திறன்கள் அதிகரிக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைக்கும்,
  • வலிமை, நெகிழ்வுத்தன்மை, மன அமைதி போன்ற "பக்க பயன்கள்" ஊக்குவிக்கப் படுகின்றன.
  • மேலோட்டமான சுவாசம் மற்றும் அதிகரித்த இதய துடிப்பு பிரச்சினைகள் சரி செய்யப் படுகின்றன.
  • அறிவியல் ரீதியாக உடலின் எல்லா பாகங்களுக்கும் வாழ்க்கை சக்தி அல்லது பிராணா அனுப்பப் பட்டு, உடல் தன்னைத் தானே ஆற்றுப் படுத்திக் கொள்ள உதவுகின்றது.
  • எடை இழப்பு ஊக்குவிக்கின்றது

பரிந்துறைக்கப் படும் சில யோகாசனங்கள்

இதயத்திற்குக் குறைவான சிரமத்தை அளித்து, உட்கார்ந்து கொண்டோ, முதுகு தரையில் இருக்கும்படிப் படுத்துக் கொண்டோ செய்யப் படும் பயிற்சிகள் நன்மை தரும். உங்களது உடல் நிலைமைக்குப் பொறுத்து கீழ் கண்ட ஆசனங்களைச் செய்யலாம்.

  •  
  • ப்ரம்மாரி பிராணாயாமா

  •  
  •  
  •  
  • சேது பந்தனாசனா
  • பவன முக்தாசனா (தலையினைத் தூக்காமல்)
  • மகராசனா ப்ரம்மரி பிராணாயாமத்துடன்
  • சிசு ஆசனா

எச்சரிக்கைகள்

  • உங்கள் உடல்நல மருத்துவரைக் கலந்தாலோசித்த பின்னரே யோகாசனங்களைச் செய்யுங்கள்.சிறந்த யோக நிபுணரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள்..உங்கள் உணவு மற்றும் மருந்துகளைப் பற்றி அவர்களிடம் கலந்தாலோசியுங்கள்.உடலின் மேற்பகுதியை கீழே வளைக்கும் பயிற்சிகளைத் தவிர்த்து விடுங்கள். யோகாசனங்களைச் செய்யும்போது, உங்கள் மருந்து மற்றும் உடல் நிலையினை உங்கள் டாக்டரிடம் சென்று உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
  • ஆசனங்களுக்கு இடையில் சற்றுக் கண்ணை மூடி சில மூச்சுக்கள் எடுத்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அதிக சிரமத்தினை மேற்கொள்ள வேண்டாம்.
  • மூச்சு உள்ளிழுத்து வெளி விடும் முறையைச் சரியாகப் பின்பற்றவும்.
  • ஆரம்பத்தில் சில உடலை இளக்கும் பயிற்சிகளும், இறுதியில் சவாசனா வும் மிக அவசியமானவை ஆகும்.

சரியான உணவு, சரியான உடற்பயிற்சி

  • உப்பைத் தவிர்த்து விடுங்கள். எலுமிச்சம் பழம்,கொழுப்புக் குறைந்த தயிர், வாசனைக்கு வேர்கள் மூலிகைகள், ஆகியவற்றைப் பயன் படுத்துங்கள்.
  • ஊறுகாயைத் தவிர்த்து விடுங்கள்
  • உப்புக் குறைவான சட்னிகள் சாலடுகள் இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பொட்டாசியம் மக்னீசியம் நிறைந்த கைகளான வெண்டைக்காய், கருப்பு பீன்ஸ், பூசணி விதைகள், கீரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இயற்கை உணவுகளையே எடுத்துக் கொள்ளுங்கள்.புட்டிகளில் அடைக்கப் பட்ட உணவுகள், பதப் படுத்தப் பட்ட மற்றும் குளிர்விக்கப் பட்ட உணவு வகைகள், உணவகங்களில் உள்ள உணவு வகைகள் அனைத்தையும் தவிர்த்து விடுங்கள்.
  • புகை பிடிக்காதீர்கள். மது அருந்த வேண்டாம்.
  • மூலிகைத் தேநீர் மாதுளம் பழச் சாறு, கிரீன் டீ இவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • எண்ணெய் அளவிற்கு மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.
  • எடையை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளுங்கள்
  • உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசித்து என்ன விதமான உடற்பயிற்சி செய்யலாம் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.தியானம், பிராணாயாமா செய்யுங்கள். கவலையை விட்டு விடுங்கள்.

நலமான வாழ்க்கைக்கு ஆயுர்வேதம்

பழமையான அறிவியல் முறையாகிய ஆயுர்வேதம் நலமான வாழ்க்கைக்கு உதவுகின்றது. இது இயற்கையான மாற்று. பக்க விளைவுகள் இல்லாதவை. யோகாவுடன் ஆயுர்வேதத்தை இணைத்து, உங்கள் ரத்த அழுத்தத்தை கவனித்துக் கொள்ளுங்கள். காலப் போக்கில் சரியாகி விடும்.

யோகப் பயிற்சி உடலையும் மனதையும் ஊக்குவித்து ஏராளமான உடல்நல பயன்களை அளிக்கின்றது. ஆயினும் இது மருந்துகளுக்கு மாற்று அல்ல. தேர்ச்சி பெற்ற ஒரு ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் யோகா பயிற்சிகளைக் கற்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது ஆகும்.