நீங்கள் இழக்கக்கூடாத பத்து முக்கிய மூலிகைகள்

நீங்கள் இழக்கக்கூடாத  பத்து முக்கிய மூலிகைகள்

 

பழமையான ஆயுர்வேத அறிவியலில் மூலிகைகள் ஆன்மீக சாரமுள்ளவையாக - தாவரங்களின் குண்டலினியாகக் கருதப் படுகின்றன. தாவரங்களும் மூலிகைகளும் தங்களுடைய திசுக்களில் பிரபஞ்ச ஞானத்தையும் இயற்கையின் ஆற்றுப்படுத்தும் அதிர்வலைகளையும் கொண்டிருக்கின்றன. பழங்காலத்திலிருந்தே மனித இனமும் தாவரங்களும் ஆன்மீகத் தொடர்பைக் பெற்றிருக்கின்றன. தாவரங்கள் சூரிய ஆற்றலை கைப்பற்றி அதனை மனிதன் ஜீரணித்துக் கொள்ளும் சத்துப் பொருட்களாக மாற்றுகின்றன.

ஆயுர்வேத மூலிகை ஒவ்வொன்றும்  மனம், உடல், மற்றும் ஆத்மாவிற்குப் பல்வேறு பயன்களைக் கொண்டிருக்கின்றன. மூலிகைகளை உடலுக்குள்ளும் வெளியேயும் (தோலில் மூலம் ) மற்றும் வாசனை வழியாகவும் எடுத்துக் கொள்ளலாம். எடை குறைவதிலிருந்து, அழகான சருமம், முழுமையான சத்து வரையில், பயன் தருகிறது. ஒருவரது உணவுப் பழக்கத்தை மற்றும் வாழ்க்கை முறையை செயல் நிலைகளை மாற்றிக் கொள்வதும் முக்கியம்.

கீழே தரப்பட்டிருக்கும் பயனுள்ள மூலிகைகளைப்  பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

 

  1. அஜ்வைன்(ஓமம்)

 

 

அஜ்வைன் அல்லது ஓமம் ஒரு சிறந்த ஜீரண மருந்து மற்றும் நரம்புகளைத் தூண்டி விட வல்லது. உடல் எடையைக் குறைக்கவும் உடலுக்குள் ஆழத்திலிருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். மூட்டு வலைகளை நீக்கவும் வாத சம்பந்தமான பிரச்சினைங்களைத் தீர்க்கவும் சிறந்தது. உடல் எடையைக் குறைக்க இதனை தேநீர் போன்று 16  அவுன்ஸ் நீரில் ஒரு டி ஸ்பூன் ஓமம் போட்டுக் காய்ச்சிக் குடிக்கலாம்.

 

2. அஸ்வகந்தா

 

 

மூப்பைக் குறைக்கும் மிகச் சிறந்த மூலிகையான அஸ்வகந்தா சத்துக்களை மேம் படுத்துகிறது. அதிகப் பணி மற்றும் அதிக அழுத்தத்தால் அவதியுறுபவர்களுக்கு இது மிக முக்கியமானது. அரை ஸ்பூன் அஸ்வந்தாவை பாலில் வேக வைத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து பருகுங்கள். ஆயுர்வேத மூலிகைகள்  (நெய், வெண்ணை, அல்லது காய்ச்சாத முழுமையான பால்போன்ற) சத்தான கொழுப்புள்ள பொருட்களுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது ஆழமாக செல்களுக்குள் செல்கின்றன.

 

3.பிராம்மி (மூளைக்கான பலவிருத்தி மூலிகை )

 

மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்குச் சிறந்த டானிக் பிராம்மி ஆகும். மூளையின் இடது மற்றும் வலது புறப்பகுதிகளைச் சமநிலைப் படுத்தி பினியல் சுரப்பியில் சுண்ணாம்புச் சேர்ப்பைக் குறைக்கிறது.மூன்று தோஷங்களையும் அகற்றி விடும் இது முக்கியமாக பித்த தோஷத்தை சமநிலைப் படுத்துகிறது. நரம்பு மண்டலத் திலிருந்து நச்சுக்களை மற்றும் அடைப்புக்களை பிராம்மி நீக்கி விடுகிறது. மனச் சோர்வை அகற்றி, புத்திக் கூர்மையை அதிகப் படுத்துகிறது.நினைவாற்றல் மற்றும் கவனக் குவிப்பையும் அதிகப் படுத்துகிறது. தலை முடி வளர்வதற்கும் சிறந்த மூலிகை. ஒவ்வொரு நாளும் காலை வெளியில் பிராம்மி எடுத்துக் கொண்டு உங்கள் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியளியுங்கள். நீரில் அல்லது பாலில் கொதிக்க வைத்து தேநீர் போன்றும் பிராம்மி நெய்யாகவும் எடுத்துக் கொள்ளலாம். மூலிகை எண்ணையாக தலையில் தடவிக் கொள்ளலாம்.அனைத்து சத்துக்களும் தலையிலுள்ள சக்கிரத்தின் வழியாக மூளை செல்களுக்குச் செல்லும்.

 

4. ஏலக்காய்

 

இயற்கையான நோய்  நிவாரணியான ஏலக்காய் மனதிற்கும் இதயத்திற்கும் தெளிவையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது. காபி போன்றவை  ஏற்படுத்தும் அமிலத் தன்மையைக் குறைத்து, பால் ஏற்படுத்தும் சளித்தன்மையையும் சமப்படுத்துகிறது. வயிற்று பகுதியிலும் நுரையீரல்களிலும் ஏற்படும் அதிகப் படியான கபத்தை நீக்கி விடுகிறது.காபியிலும் இரவு நேரம் பாலிலும் ஏலக்காய் பொடி அல்லது ஏலக்காய் நெற்றுக்களைக் கலந்து காய்ச்சிக் குடியுங்கள்.

 

5. சீரகம் ( ஜீரணம் மற்றும் உட்கிரகித்தல் )

 

 

 

ஜீரகம் ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்ள உதவுகிறது.பிரசவித்த இளம் தாய்மார்களுக்கு இனப்பெருக்க உறுப்புகள் சுத்தப் படுவதற்கும் தாய்ப் பால் சுரப்பதற்கும் முக்கியமாக உதவுகிறது. சமைக்கும் போது ஜீரகத்தைப் பயன்படுத்துங்கள்; அது நுண்ணிய சத்துக்கள் உட்கிரகிக்கப் படுவதற்கு உதவுகிறது.

 

6. அதிமதுரம்

 

புத்துணர்ச்சியளிக்கும் இந்த மூலிகை கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் பயன் படுத்தப் படுகிறது. உடலின் அனைத்து அமைப்புக்களுக்கும் புத்துணர்ச்சி யளிக் கும் அதிமதுரம் தொண்டை  கட்டை நீக்கி, அமிலத் தன்மையைக் குறைக்கிறது. மனதை அமைதி படுத்தி, ஆத்மாவை செழிக்க வைக்கிறது.சூடான தேநீரில் தேன் அல்லது சர்க்கரைக்குப் பதிலாக அதிமதுரத்தை சேர்த்து குடியுங்கள்.அல்லது அதிமதுரத் தூளை பாலில் கலந்து குடியுங்கள்.

 

7. மஞ்சிஸ்தா (தூய்மைப்படுத்தும்  மூலிகை)

 

ஆயுர்வேத மருந்துகளில் மிகச் சிறந்த தூய்மைப் படுத்தும் மூலிகை மஞ்சிஸ்தா. அழற்சியை நீக்கும் இது, பருக்களையும் அகற்றுகிறது. ரத்தம் கல்லீரல் ஆகிய வற்றைச் சுத்திகரிக்கும் மஞ்சிஸ்தா பித்தத்தால் ஏற்படும் கோளாறுகளை அகற்றி விடுகிறது. ரத்தத்தை ஆற்றுப்படுத்தி, நச்சுக்காய் நீக்குகிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளை சரிப்படுத்துகிறது. பித்தக் கோளாறுகளால் அவதியுற்றால் இந்த மூலிகை மருந்தை, மாத்திரை வடிவில், காலையில் இரண்டு மாலையில் இரண்டு என்று எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது இரவில் பாலுடன் எடுத்துக் கொள்ளுங்கள்.தோலில் ஏற்படும் நோய்களுக்கும்,  மற்றும் முகத்தில் பற்றுப் போலவும் போடலாம்.

 

8. வேப்பிலை( நச்சு நீக்கி)

 

வேப்பிலை மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்பு மூலிகை ஆகும்.தோல் நோய்கள் தோல் பாதிப்பு (முக்கியமாக சூரிய ஒளியால் பாதிப்பு) பித்தக் கோளாறுகள் ஆகியவற்றுக்குச் சிறந்த மூலிகை மருந்து ஆகும். எக்சிமா மற்றும் சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களுக்கு அற்புத மருந்து. மூட்டு மற்றும் தசை வலிகளுக்கும்  சிறந்தது. வேப்பிலை  எண்ணெயை  தோலின் மீது தடவுங்கள்.

 

9. சத்வாரி (தண்ணீர் விட்டான் மூலிகை)

 

 

சத்வாரி அல்லது தண்ணீர்விட்டான் மூலிகை பெண்களுக்குப் புத்துணர்வு அளிக்கும் மூலிகையாகும். இம்மூலிகை “ஆயிரம் கணவர்களைக்  கொண்டவள்" !  என்றும் கூட மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இது, இம்மூலிகையின்  நூற்றுக் கணக்கான வேர்களைக் குறிக்கிறது. இது ரத்தத்தைச் சுத்தப் படுத்தி, பெண்களின் இனப்பெருக்க உறுப்புக்களை சுத்தப்படுத்துகிறது. மாத்திரை வடிவில் மற்றும் சூரணமாக கிடைக்கும் இம்மூலிகையை நெய் அல்லது காய்ச்சிய பால் ஆகிய வற்றுடன் எடுத்துக் கொள்ளலாம்.

 

10. மஞ்சள்

 

மஞ்சள் ரத்தத்தைச் சுத்திகரித்து, உடலின் அனைத்துப் பகுதிகளையும் சுத்திகரிக்கிறது. தோலின் நிறத்தை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீர் செய்து, தோலுக்கு சத்துக்களை அழைக்கிறது. அழற்சியை நீக்கும் மஞ்சள் பருக்களுக்கு மிகச் சிறந்த மருந்து. மஞ்சள் அனைத்து தோஷங்களை நீக்கி பித்தத்தை சமநிலைப் படுத்துகிறது. பித்தம் ரத்த சுத்திகரிப்பு மற்றும் கல்லீரல் சுத்திகரிப்புக்கு முக்கியமானது ஆகும். தினமும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை ஏதேனும் ஒரு வடிவில்  உணவில் அல்லது தோலின் மீது பயன்படுத்துங்கள்.காய்கறிகள் மற்றும் உப்புமா போன்றவற்றில் மஞ்சள் தூளை பயன்படுத்துங்கள். ஆட்டுப்பாலைக்  காய்ச்சி மஞ்சளும் தேனும் கலந்து உறங்கச் செல்வதற்கு முன் பருகுங்கள். சீரான முறையில் தினமும் மஞ்சளை பயன்படுத்தினால் உடல்நலம் பல்வேறு விதங்களில் மேம்படும்.

 

>>>>>>>>>>>