பெண்களுக்கான யோகப் பயிற்சி
அவர்கள் பலவகைமிக்க மற்றும் வெற்றிகரமான திறமை மிக்கவர்; - பணியில் செயல் திறனுள்ளவர், குடும்பத்தில் மிக்க பற்றுள்ளவர். அவர்கள் வாழ்க்கையில் பல துண்டுகளை ஒன்றாகப் பசையிட்டு இணைக்கும் வல்லமை மிக்கவர். இதயங் களிலும், சமூகங்களிலும் பெண்கள் கொண்டிருக்கும் இடத்திற்கு எந்த ஈடு இணை யும் கிடையாது. ஆனால் பெண்களும் தங்கள் சக்தியை நீட்டித்து அழுத்த முறுகிறார்கள். தங்களை சுற்றியிருக்கும் அனைவரையும் கவனித்துக் கொள்ளும் அவர்களைக் கவனிப்பது யார்? அதற்கான விடை யோகா என்பதுதான். இன்றைய நிலையில் அழகு மற்றும் அறிவுத் திறன் இரண்டையும் சமநிலைப் படுத்தும் யோகா !
"எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் வாழ்க்கையின் கதாநாயகி பெண், பலி அல்ல" - நோரா எபிரோன்.
தங்களது நேரத்தை பல்வேறு பணிகளுக்கு வெற்றிகரமாகத் தரும் பெண்களுக்கு பல வல்லுநர்கள் யோகாவைப் பரிந்துரைக்கின்றனர். பெரிய கனவுகளைக் கொண்டிருக்கும் பெண்கள் எப்போதும் கடினமாக உழைக்கின்றனர். ஒரு சூப்பர் மேன் போன்று, வழக்கமாக அலுவலக பணிகள் தவிர இல்லத்தில் அனைத்துப் பணிகளை பகலும் இரவும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப் படுகின்றனர். பெண்கள் தங்கள் திறமை மற்றும் கருணையுடன் தங்கள் குடும்பப் பொறுப்புக்களைக் கையாண்டு பின்னர் அவர்களது கல்வி மற்றும் புத்தி திறமைகளை நியாயப்படுத்தும் வகையில் நான்கு சுவர்களுக்கு வெளியேயும் பணி புரிய வேண்டியதிருக்கிறது.
உலகெங்கிலும், பெண்கள் ஒரே சமயத்தில் எந்த ஒரு நேரத்திலும் வீழ்ந்து விடாத வகையில் காற்றில் பல பந்துகளை வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகின்றனர். அதனால் தான் யோகா பெண்களுக்கு ஒரு ஆசீர்வாதம் போல் விளங்குகிறது. கடினமான பொறுப்புகள் உள்ள இவ்வுலக வாழ்வில், யோகா நல்லறிவு நிலை மற்றும் மன அமைதி அடைவதற்கான ஒரு வழிமுறையாகும். எளிமையான சுவாச நுட்பங்கள் அவர்களை அமைதிப்படுத்தி, பல்வேறு பணி களைத் திறமையாகக் கையாள வைக்கின்றது.
பெண்களின் உடல்களை மிருதுவாக, இளக்கமாக வைப்பதைத் தவிர மேலும் பல பலன்களை யோகா அளிக்கின்றது. இது மனதிற்கு சமநிலையையும் ஆத்மாவிற்கு ஊட்டச் சத்தையும் அளிக்கிறது. அதனாலேயே, யோகாவை தாங்கள் சுமக்கும் பணி அட்டவணையில் மற்றொன்றாக கருதக்கூடாது. உண்மையில் யோகா அவர்களது கடமைகளை உகந்த வகையில் கையாள உதவும் ஒரு மிகத் தேவையான பயிற்சி ஆகும். யோகாவுடன் தொடர்புபடுத்தக்கூடிய தர்க்கரீதியான கேள்வி என்னவென்றால் அதை எப்போது துவங்குவது என்பதுதான். கேக் மீது வைக்கும் ஐசிங் போன்று, பெண்களைப் பொறுத்தவரையில் யோகா எல்லா வயதினருக்கும் பொருத்தமானது. யோகாவின் மூலம் எவ்வாறு பல நன்மைகளை பெண்கள் அடைய முடியும் என்பதை இங்கு தொடர்ந்து படியுங்கள்...
யோகா - ஆரம்ப ஆண்டுகளில் பெண்களுக்கு அது ஓர் ஆசீர்வாதம்
"ஸ்ரீ ஸ்ரீ யோகா ஆசிரியரின் நிபுணத்துவ வழிகாட்டுதலின் கீழ், நான் யோகாசனங் களை எளிமையாகக் கற்றுக் கொள்ளவும் அவற்றின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவும் முடிந்தது. நிச்சயமாக இது மனம் மற்றும் உடலின் ஒருங்கிணைந்த ஆற்றலுக்கு ஒரு தனித்துவமான அனுபவமாகும்."
அனாமிகா கோஸ்லா, மனித வளம், நிர்வாகம் மற்றும் நிதி தலைவர், Kmass பிரைவேட். Ltd., இந்தியா.
பெண்களின் பதின்வயதில் யோகா மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த குழப்ப மான காலம், பெண்கள் உடலிலும், மனதிலும் பெரும் மாற்றங்களைச் சந்திக்கும் போது அவர்களது முழு வாழ்க்கைக்கும் உருவமளிக்கிறது. யோகாவின் வடிவ மைக்கப்பட்டுள்ள பல்வேறு ஆசனங்கள் இந்த கட்டத்தில் பல மாற்றங்களை எளிதில் மற்றும் வலியற்ற வகையில் ஏற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக, பிராணயாமா மற்றும் தியானம் பதின்வயதினரின் அச்சம் மற்றும் குழப்பமான மனநிலையை அமைதிப்படுத்துகிறது. பருவ வயதிலேயே ஏற்படும் உடல் மாற்றங்கள் அலைந்து திரிகின்ற மனநிலையை தோற்றுவிக்கின்றது. தனுர் ஆசனம் மற்றும் வஜ்ராசனம் போன்ற ஆசனங்கள், பெண்களுக்கு ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை உருவாக்க ஏற்றதாக அமைந்துள்ளன. இந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வது பெண்களின் தசை வலிமையை மேம்படுத்தி, உடல் பருமனைத் தவிர்த்து, ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருப்பதன் மூலம் ஆரோக்கியமான இனப்பெருக்க உறுப்புகளை அவர்கள் கொண்டிருக்க உறுதி செய்கிறது.
யோகா : பெண்களின் கர்ப்ப காலத்திற்கு மிகச் சிறந்தது.
பெண்கள் கருத்தரித்தல் மற்றும் தாய்மை ஆண்டுகளில் பல்வேறு உடல் மாற்றங் களை அடைகின்றனர். யோகா பெண்களுக்கு உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவுகிறது. பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தின்போது பல்வேறு 'அன்னிய' உணர்வுகளை அனுபவிக்கிறார்கள்; நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அவர்கள் அடைவதும் பராமரிப்பதும் மிக முக்கியமானவை. சில நேரங்களில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத பல்வேறு ஹார்மோன் மாற்றங்களைக் அடையும் கடினமான காலம் இது. பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சிகளை சரியான உருவில் வைத்திருக்க சில யோகாசனங்கள் பரிந்துரைக்கப் படுகின்றன. கர்ப்ப காலத்தில் யோகா பெண்களை நெகிழ்வான மற்றும் ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்கிறது. கர்ப்பம் அல்லது பிரசவ காலத்தில் ஏற்படும் எந்த சிக்கல்களையும் கடந்து வருவதற்கு உகந்த வாய்ப்பு தருவதை உறுதிசெய்கிறது.
குழந்தை பிறப்பதற்கு முன்னர் செய்யும் யோகா, உடல் மாறிவரும் போது ஏற்படும் தேவைகள் மற்றும் திறன்களை ஏற்கவல்ல பல நன்மைகளை கொண்டுள்ளது. இது பெண்களின் கர்ப்பப் பையின் தசைகளை வலுப்படுத்த உதவுவதுடன், முதுகெலும்பு, கூடுதல் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்வதற்கும் உதவுகிறது. பிராணயாமா மற்றும் யோக சுவாசம் ஆகியவை, பிரசவத்திற்குப் பின்னர் பெண்கள் தசை நார் இழப்புகளில் உறுதிப்பாட்டை பெற உதவுகின்றன. பாலூட்டிகளையும் அதிகரிக்கச் செய்கிறது.
இடைநிலை காலத்தில் யோகா
இது பாலினத்திற்கான கடினமான வயதுகளுள் ஒன்றாகும், ஆனால் பெண்களுக்கு இந்த சிக்கல்கள் குறிப்பிடத் தக்கவை. மாதவிடாய், எடை அதிகரிப்பு, தைராய்டு பிரச்சினைகள் மற்றும் இவை போன்ற பிற நிலைமைகள் மற்றும் வியாதிகளை பெண்கள் அனுபவிக்கிறார்கள். இந்த நேரத்தில் பெண்களுக்கு யோகாவின் நன்மைகள் குறிப்பிடத் தக்கவை. யோகா சிறந்த சிகிச்சைமுறை சக்திகளைக் கொண்டிருக்கிறது, ஹார்மோன்கள் சமநிலை பெற உதவுகிறது, எடையைக் கட்டுப்படுத்தவும், இறுதி மாதவிடாய் காலத்தை மென்மையாக கடந்து வரவும் , ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்கவும் உதவுகிறது. பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவை பெண்களுக்கு வாழ்க்கையில் மிகவும் கடினமான நேரத்தில் மிகவும் உதவியாக இருக்கின்றன.
ஸ்ரீ ஸ்ரீ யோகா வாழ்நாள் முழுவதும் பெண்களின் உறுதுணை
பெண்களின் வாழ்க்கையில் இந்த கால கட்டங்களில் ஸ்ரீ ஸ்ரீ யோகா முக்கியமான பங்கினை ஏற்கிறது. பதின் வயது, தாய்மை, மாதவிடாய் மற்றும் முதிர் வயது வரை பெண்களுக்கு பல வாழ்க்கை மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாறும் மனநிலையால் ஏற்படும் நல்லிணக்கக் குறைவிலிருந்து பெண்களுக்கு நிவாரணம் வழங்குகிறது யோகா. அது அவர்களின் வாழ்வில் சமநிலையை ஏற்படுத்தும். பெண்கள் தங்கள் வயது மற்றும் தேவைகளுக்கு ஏற்ப அன்றாட யோகா பழக்கத்தை வடிவமைத்துக் கொள்ளலாம். இதனால் அவர்கள் உடல் வலிமையையும் மன அமைதியையும் அடைய முடியும்.
ஒரு ஸ்ரீ ஸ்ரீ யோகா நிச்சயமாக யோகா பயிற்சிகள் பலவற்றைக் கற்றுக் கொடுக்கிறது, இதை உங்கள் வீட்டில் அல்லது உங்கள் பணியிடத்தில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். யோகாசனம், பிராணாயாமம், மற்றும் தியான நுட்பங்கள் ஸ்ரீ ஸ்ரீ யோகா பாடத்தில் கற்பிக்கப்படுகின்றன. அவை பெண்களுக்கு பல்வேறு வாழ்க்கையில் சவாலான நிலைகளில் உதவும்.
பெண்களின் பொற்காலத்தில் பிரகாசிக்கும் யோகா
"ஸ்ரீ ஸ்ரீ யோகாவின் அன்றாடப் பயிற்சி உடல், மனம், ஆத்மா ஆகியவற்றிற் கான வெளிப்படையான மற்றும் எதிர்பாராத நன்மைகளை எனக்கு வழங்கி யிருக்கிறது. இது எனக்கு ஆறுதல், பிரதிபலிப்பு, மகிழ்ச்சி, ஏற்புடைமை மற்றும் இளைப்பாறுதல் ஆகியவற்றைத் தந்திருக்கிறது. என் வேகமான வாழ்க்கையில் புதிய எல்லைகளை ஆராயும் போது என் பலம் மற்றும் பலவீனங்களை எனக்கு உணர்த்துவதிலும் மிகவும் சிக்கலான நேரங்களில் உள் ஒளிரும் சக்தியும் மற்றும் பலம் ஆகியவற்றுடன் இணைத்துக் கொள்வதிலும் எனக்கு உதவியிருக்கிறது "என்று அனிகா கூறுகிறார்.
மேலும்," பெண்கள் வாழ்க்கையின் பொற்காலம் அவர்களுக்கு மேலும் தனிப்பட்ட சவால்களை கொண்டு வருகிறது. பெண்களுக்கான யோகா, இந்த கால கட்டத்தில், குறைந்த உடல் செயல்பாடுகளை உள்ளடக்கியது. சிக்கலற்ற ஆசனங்கள்தாம் உள்ளன. இந்த ஆசனங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த ஆசனங்கள் ஒரு ஆரோக்கியமான நரம்பு மண்டலம் உடலை நீட்டுவிக்க உதவி, மற்றும் இறுதியாக, முற்றிலும் ஓய்வெடுக்க உதவுகிறது. அனைத்து நிலைகளிலும், யோகா, இந்த கட்டத்தில், உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றைக் கொண்டுவருவதன் மூலம், சமநிலை மற்றும் இணக்கத்தை ஊக்குவிக்கிறது.” என்கிறார்.
பெண்களுக்கான ரகசியம் என்னவென்றால், யோகாவை சுவாசத்தைப் போன்று - தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் இடைவிடாது செய்வதால் யோகப் பயிற்சி பெண்களுக்கு எந்த வயதிலும் சிறந்ததாக அமையும்.
ஸ்ரீ ஸ்ரீ யோகா பெண்களுக்கு ஒரு ஓய்வு அனுபவம்; மற்றும் அது நலமாக இருக்கும் ஒரு ஒட்டுமொத்த உணர்வை எடுத்து வருகிறது.. ஸ்ரீ ஸ்ரீ யோகா சீரான பயிற்சி செய்யும் நேரம் உங்களுக்கான நேரம் மட்டுமே. ஒரு பணிபுரியும் பெண், மனைவி மற்றும் தாய் என்ற பணிக் கோரிக்கைகளிலிருந்து ஒரு இடைவெளி எடுத்து, நீங்கள் நீங்களாக மட்டும் இருங்கள்!